மீண்டும் வாள்வெட்டு கலாசாரம் : இரவுவேளையில் பதற்றத்தில் மக்கள்

Published By: Priyatharshan

17 Oct, 2016 | 09:24 AM
image

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக மீளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் இரவு யாழ்.குடாநாட்டி நகரப்பகுதிகளில் மூகமுடி அணித்த கும்பலொன்று வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டிருந்ததையடுத்து யாழ்.நகரில் பதற்றமான சுழல் ஏற்பட்டது. 

இந்நிலையில் இவ் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் யாழ்.நகரப் பகுதியான நாவலர் கலாச்சார மண்டபப்பகுதி இராசாவின் தோட்டச் சந்தி ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களுடன் கும்பலொன்று நடமாடியதாக  அவர்களை நேரில் கண்ட பலர் தெரிவித்திருந்தனர். குறிப்பாக இவர்கள் கோடரி வாள் இரும்புக் கம்பிகள் போன்றவற்றை வைத்திருந்ததாகவும் அத்துடன் இரண்டு மோட்டார் சைக்கிளில் மூவர் வீதம் ஆறுபேர் முகங்களை கறுப்புத் துணியால் மறைத்து தலைக்கவசங்களை அணிந்திருந்ததாகவும் நேரில் கண்டவர்கள்   தெரிவித்தனர்.

தொடர்ந்து இக் கும்பலானது இலுப்பையடி சந்திக்கு அண்மையில் இருந்த வாகனமொன்றின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டு அதன்பின்னர் இராசாவின் தோட்டச் சந்திக்கு அண்மையிலுள்ள புகையிரத கடவையில் வைத்து சிலர் மீது வாள்வெட்டுத்தாக்குதலை நடாத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இச் சம்பவமானது நடைபெற்ற போது புகையிரத கடவை மூடப்பட்டிருந்ததாகவும் இவ் வாள்வெட்டு சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் அச்சத்தின் காரணமாக ஒட முற்பட்ட போது அவர்களில் ஒருவர் புகையிரத கடவையின் மீது மோதியதால் தலைப்பகுதியில் காயமடைந்தாகவும்   தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் வாள்வெட்டுக்களை மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் யாழ்.மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இது போன்ற வாள்வெட்டு கலாச்சாரமானது யாழ்.குடாநாட்டில் அதிகரித்திருந்ததுடன் இவற்றில் பிரதான சந்தேகநபர்களாக மூவர் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான விஷேட பொலிஸ் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் குறித்த மூவரும் தப்பியிருந்த நிலையில் அவர்களுக்காக இவ் வாள்வெட்டு சம்பவங்களை செய்திருந்த வேறுசிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில்   குறைந்திருந்த வாள்வெட்டு சம்பவமானது தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் இரவு வேளைகளில் யாழ். குடாநாட்டில் பயங்கரமான பதட்டமான ஒர் சுழல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30