பதுளை – மாணிக்கவள்ளி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையான கணேசன் கலைச்செல்வன் காணாமல் போயிருப்பதாக, அவரது மனைவி பதுளைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடளித்துள்ளார்.
கணேசன் கலைச் செல்வன் என்ற குறித்த நபர், கட்டார் நாட்டில் தொழில் செய்து வந்தவராவார். அந்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நபர் பல மாதங்களாகியும், இதுவரை வீடு வரவில்லை.
இதனால் இவரது மனைவியும், மூன்று பிள்ளைகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வெளிநாட்டுப் பணியகமும், கணேசன் கலைச்செல்வன், இலங்கைக்கு பல மாதங்கங்களுக்கு முன்பே, திரும்பிவிட்டதாகவும், அவர் இலங்கையில் எங்கு இருக்கின்றார் என்பது தமக்கு தெரியாதென்றும் கூறியதாக, அவரது மனைவி குறிப்பிடுகிறார்.
இப்படத்தில் காணப்படும் கணேசன் கலைச்செல்வனை அறிந்தவர்கள், கண்டவர்கள் எவருமிருப்பின், அவரது மனைவியான டி. பொன்மலர் என்பவருடன் - 075-3425661 என்ற கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM