ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திடமிருந்து டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட Coral Energy DMCC நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையான 08 மாத காலத்திற்கு டீசலை கொள்வனவு செய்ய இலங்கைக்கு ஒப்பந்தம் அனுமதியளிக்கிறது.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 07 மாத காலத்திற்கு மசகு எண்ணெய்யை இலங்கை கொள்வனவு செய்ய முடியும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நிலவும் டொலர் நெருக்கடியால் தேவையான எரிபொருளை அரசால் கொள்வனவு செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM