ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடமிருந்து டீசல், மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

Published By: Digital Desk 4

15 Mar, 2022 | 12:28 PM
image

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திடமிருந்து டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட Coral Energy DMCC நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையான 08 மாத காலத்திற்கு டீசலை கொள்வனவு செய்ய இலங்கைக்கு ஒப்பந்தம் அனுமதியளிக்கிறது.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 07 மாத காலத்திற்கு மசகு எண்ணெய்யை இலங்கை கொள்வனவு செய்ய முடியும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நிலவும் டொலர் நெருக்கடியால் தேவையான எரிபொருளை அரசால் கொள்வனவு செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38