பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற  நிலையில் வைத்தியசாலையில் அனுமதி 

Published By: Digital Desk 4

14 Mar, 2022 | 04:33 PM
image

மட்டக்களப்பு எல்லைக்கிராமான வடமுனை ஊத்துச்சேனை வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் இன்று திங்கட்கிழமை (14) வழங்கப்பட்ட உணவை  உண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற  நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். 

அரசியல், பாதுகாப்புக் காரணங்களுக்காக வைத்தியசாலையில் அனுமதியாவோரால் சிரமம் ; வைத்தியசாலை நிர்வாகத்தினர் கவலை | Virakesari.lk

குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 9 வரையான 64 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் கல்வி அமைச்சின் மதியபோசன உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இங்கு கல்வகற்றுவரும்  மாணவர்களுக்கு உணவை பாடசாலை நிர்வாகம் தனியார் ஒருவரிடமிருந்து பெற்று வழங்கிவருகின்றனர். 

இந்த நிலையில் வழமைபோல இன்று காலை சோறும், சோயாமீற் கறியும்  மாணவர்களுக்கு வழங்கப்பட்டதையடுத்து அதனை மாணவர்கள் உட்கொண்ட  பின்னர் சில மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததையடுத்து  அங்கு மாணவர்களுக்கிடையே பதற்ற நிலை ஏற்பட்டது 

இதனையடுத்து வாந்தியெடுத்த 9 மாணவர்களும் உடனடியாக வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:23:35
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08