பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற  நிலையில் வைத்தியசாலையில் அனுமதி 

Published By: Digital Desk 4

14 Mar, 2022 | 04:33 PM
image

மட்டக்களப்பு எல்லைக்கிராமான வடமுனை ஊத்துச்சேனை வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் இன்று திங்கட்கிழமை (14) வழங்கப்பட்ட உணவை  உண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற  நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். 

அரசியல், பாதுகாப்புக் காரணங்களுக்காக வைத்தியசாலையில் அனுமதியாவோரால் சிரமம் ; வைத்தியசாலை நிர்வாகத்தினர் கவலை | Virakesari.lk

குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 9 வரையான 64 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் கல்வி அமைச்சின் மதியபோசன உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இங்கு கல்வகற்றுவரும்  மாணவர்களுக்கு உணவை பாடசாலை நிர்வாகம் தனியார் ஒருவரிடமிருந்து பெற்று வழங்கிவருகின்றனர். 

இந்த நிலையில் வழமைபோல இன்று காலை சோறும், சோயாமீற் கறியும்  மாணவர்களுக்கு வழங்கப்பட்டதையடுத்து அதனை மாணவர்கள் உட்கொண்ட  பின்னர் சில மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததையடுத்து  அங்கு மாணவர்களுக்கிடையே பதற்ற நிலை ஏற்பட்டது 

இதனையடுத்து வாந்தியெடுத்த 9 மாணவர்களும் உடனடியாக வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07