மட்டக்களப்பு எல்லைக்கிராமான வடமுனை ஊத்துச்சேனை வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் இன்று திங்கட்கிழமை (14) வழங்கப்பட்ட உணவை உண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 9 வரையான 64 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் கல்வி அமைச்சின் மதியபோசன உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இங்கு கல்வகற்றுவரும் மாணவர்களுக்கு உணவை பாடசாலை நிர்வாகம் தனியார் ஒருவரிடமிருந்து பெற்று வழங்கிவருகின்றனர்.
இந்த நிலையில் வழமைபோல இன்று காலை சோறும், சோயாமீற் கறியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதையடுத்து அதனை மாணவர்கள் உட்கொண்ட பின்னர் சில மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததையடுத்து அங்கு மாணவர்களுக்கிடையே பதற்ற நிலை ஏற்பட்டது
இதனையடுத்து வாந்தியெடுத்த 9 மாணவர்களும் உடனடியாக வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM