போர் இடம்பெறும் உக்ரைன் மக்களை விட, இலங்கை மக்கள் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் -  இராதாகிருஷ்ணன் 

Published By: Digital Desk 4

14 Mar, 2022 | 03:03 PM
image

தற்போது குடும்ப ஆட்சி நடந்துக்கொண்டிருக்கும் இலங்கையில் தேசிய அரசு என்பது சாத்தியப்படாத விடயம். குடும்ப ஆதிக்கமே ஆட்சியில் கோலோச்சியுள்ளது. அதனால்தான் விமல்,  கம்மன்பில போன்றவர்கள் வெளியேறியுள்ளனர் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  

நுவரெலியாவில் இன்று (14.03.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" நாட்டில் ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து, டொலரின் பெறுமதி அதிகரித்துவருவதால் நாளாந்தம் பொருட்களின் விலை உயர்வடைகின்றது. இதனால் நாட்டு மக்கள் சொல்லொணாத் துயரங்களை   அனுபவித்துவருகின்றனர். எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு,  போக்குவரத்துறைகூட ஸ்தம்பித்துள்ள நிலை. அதுமட்டுமல்ல சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டிய பேரவலம்வேறு,  

எனினும், நாட்டை மீட்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அரசு, நிபுணர்களின் ஆலோசனைகளை உள்வாங்கவில்லை. அது தொடர்பில் ஆட்சியாளர்கள் அலட்டிக்கொள்ளமாட்டார்கள். எனவே, இந்த அரசை விரட்டியடித்தால்தான் நாட்டு மக்களுக்கு விமோசனம் கிட்டும். 

தேசிய  அரசமைக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கூறவில்லை .மாறாக தேசிய வேலைத்திட்டம் பற்றியே அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த நாட்டில் குடும்ப ஆட்சியே நிலவுகின்றது. அங்கு பிறரின் கருத்துக்கு இடமில்லை. அதனால்தான் விமல், கம்மன்பில போன்றவர்கள் வெளியேறியுள்ளனர்.  குடும்ப ஆட்சி நடக்கும் சூழ்நிலையில் தேசிய அரசு சாத்தியப்படாது. குடும்பத்தின் திட்டங்களே அமுல்படுத்தப்படும். 

போர் நடைபெறும் உக்ரைனில் வாழும் மக்களைவிட, இலங்கைவாழ் மக்கள் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டத்தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமைமா கிடைக்குமா என்பது சந்தேகமே. " - என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22