புத்தளம் - வென்னப்புவ பகுதியில் முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 39 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னபுவ பொலிஸ் பிரிவில் வயிக்கால பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இவ்வாறு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமையவே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 - 30 வயதுக்கு இடைப்பட்ட மட்டக்குளி, கனேமுல்ல, நீர்கொழும்பு, அநுராதபுரம், வத்தளை மற்றும் மீரிகம உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் 110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் ஹசீஸ் போதைப்பொருள், 27 கிராம் கஞ்சா மற்றும் 15 மதுபான போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து , நாளைமறுதினம் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM