கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
இதனடிப்படையில் பாண் ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, கோதுமை மா விநியோகஸ்தர்களான செரண்டிப் நிறுவனமும், பிறிமா நிறுவனமும் கோதுமை மாவின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்தன.
இந்நிலையில், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிறிமா நிறுவனமும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையிலேயே பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM