துருக்கியில் இடம்பெற்ற ரஷ்ய - உக்ரேன் நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லையென உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் நேரடியாக பேசினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்களைத் தாண்டியும் போர் நீடித்து வருகிறது.
இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரேனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே பெலாரசில் இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட அமைதி பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், துருக்கியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இந்நிலையில், துருக்கியில் இடம்பெற்ற போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM