தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் முயற்சி - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Published By: Digital Desk 3

10 Mar, 2022 | 02:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வ கட்சி மாநாட்டை நடத்தி தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மேற்குலக நாடுகள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கிறது.

அரசாங்கம் கொள்கைக்கு முரணாக செயற்படுகிறது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடக பேச்சாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் நடைமுறையில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. எரிபொருள் விநியோகம், மின்சார விநியோகம் ஆகிய அடிப்படை சேவைகளில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு கொவிட் பெருந்தொற்று பரவல் காரணம் என அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சர்வக்கட்சி மாநாட்டை நடத்தி தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. நடைமுறையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொருளாதார கொள்கைகள் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணியாக அமைந்துள்ளது.

நாட்டில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்குலக நாடுகள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கிறது.

திருகோணமலை எண்ணெய் தாங்களில் தனியுரிமையினை பெற்றுக் கொள்வே இந்தியா எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக இலங்கைக்கு உதவு செய்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கினோம். அரசாங்கம் கொள்கைக்கு முரணாக செயற்படுவதால் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக நாளாந்தம் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். அரசாங்கதத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் யோசனைகளுக்கும், சிவில் அமைப்புக்களின் யோசனைகளுக்கும் அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை. தான்தோன்றித்தனமாக செயற்படுவதால் சமூக மட்டத்தில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரடியனாறு பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள்...

2025-02-14 14:37:24
news-image

கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளுடன் சுங்க அதிகாரிகளிடம்...

2025-02-14 13:46:47
news-image

ரயில் மோதி வேன் விபத்து -...

2025-02-14 13:01:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-14 12:41:02
news-image

மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச...

2025-02-14 12:55:44
news-image

வரக்காபொலயில் லொறி - டிப்பர் வாகனம்...

2025-02-14 12:51:04
news-image

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக்...

2025-02-14 12:50:11
news-image

மீகஸ்வெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-02-14 12:48:22
news-image

லசந்த படுகொலை விவகாரத்தை சட்டமா அதிபர்...

2025-02-14 12:00:12
news-image

போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ;...

2025-02-14 12:13:46
news-image

கஞ்சா செடிகள், துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2025-02-14 12:33:08
news-image

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-02-14 12:24:21