ஆளுமையற்ற தவறான முகாமைத்துவம் காரணமாகவே நாடு இன்று மோசமான நெருக்கடியை சந்தித்துள்ளது : கஜேந்திரன் 

Published By: Digital Desk 4

09 Mar, 2022 | 05:14 PM
image

அரசாங்கத்தின் ஆளுமையற்ற தவறான முகாமைத்துவம் காரணமாகவே நாடு இன்று இந்த மோசமான நெருக்கடியை சந்தித்து இருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

30 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மீது பயங்கரவாதத்தை ஒடுக்குதல் என்ற போர்ரைவயில் ஒரு இனவழிப்பு யுத்தத்தை கட்டவிழ்த்து விட்ட அரசாங்கம் இந்த 30 வருடங்களில் மட்டுமல்ல 74 வருடங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தை சொல்லித் தான் சிங்கள மக்கள் மத்தியில் தமது அரசியலை செய்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் இந்த நாட்டை முன்னேற்றுவசதற்கான தெளிவான திட்டங்களோ, கொள்கைகளோ கிடையாது.

அவர்கள் இனவாத சிந்தனைக்குள் மூழ்கியிருக்கும் வரை நாட்டினை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்ல முடியாது. இவர்களுடைய ஆளுமையற்ற தவறான முகாமைத்துவம் காரணமாகவே நாடு இன்று இந்த மோசமான நெருக்கடியை சந்தித்து இருகின்றது.

எங்களைப் பொறுத்தவரையில், இன்றைய எரிபொருள் நெருக்கடியாக இருக்கலாம் அல்லது ஏனைய பொருளாதார நெருக்கடிகளாக இருக்கலாம் இவைகள் அனைத்தும் இவர்களது தவறான முகாமைத்துவம் காரணமாக ஏற்பட்டுள்ளது. இவர்கள் தமது போக்கில் ஒரு சிந்தனை மாற்றத்தை கொண்டு வர முடியாது போனால் இந்த நாடு இன்னும் மோசமான நிலையை நோக்கியே செல்லும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26
news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54