bestweb

போலி தங்க நகைகளை தயாரித்து மோசடியிலீடுபட்ட இருவர் கைது

09 Mar, 2022 | 05:06 PM
image

போலியான தங்க நகைகளை விற்பனை செய்து சுமார் 20 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரகாபொல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வாரியகொட பிரதேசத்தில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 731 கிராம் 240 மில்லிகிராம் தங்கக்கட்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25, 38 வயதுடைய அலவ்வ மற்றும் யக்கல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இதற்கு முன்னரும் இதே போன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் , இவர்களில் ஒரு சந்தேக நபர் ரம்புக்களை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொலை உள்ளிட்ட 6 குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து...

2025-07-11 20:34:31
news-image

30 சதவீத வரி வீதத்தை குறைக்க...

2025-07-11 16:11:53
news-image

மக்கள் நலன் நோக்கிய செயற்பாடுகளுக்காக அரசியல்...

2025-07-11 20:27:05
news-image

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...

2025-07-11 19:05:39
news-image

கொஸ்கொட சந்தியல் துப்பாக்கிச் சூடு; ஒருவர்...

2025-07-11 19:31:16
news-image

பிரிக்ஸில் இணைவதற்கு முழுமையான ஆதரவு ;...

2025-07-11 19:00:23
news-image

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய  ஒரு தேசமாக...

2025-07-11 19:20:43
news-image

கூட்டுறவுத்துறையில் அரசின் கட்டுப்பாடுகள் 13ஆவது திருத்தத்தை...

2025-07-11 16:41:09
news-image

இலங்கையின் ஆடைத்துறை உள்ளிட்ட வர்த்தகத்துறை மேம்பாட்டுக்கு...

2025-07-11 18:55:40
news-image

வெண்மையாக்கும் களிம்பு பாவனை சருமநோய்க்குள்ளாகுவோரின் எண்ணிக்கை...

2025-07-11 18:24:32
news-image

ஒரு கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர்...

2025-07-11 17:35:29
news-image

ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள்...

2025-07-11 17:40:03