(சத்ரியன்)
தற்போதைய அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், தாங்களே அடுத்து ஆட்சியமைக்கப் போவதாக பல்வேறு தரப்புகள் கூறிக் கொண்டிருக்கின்றன.
பொதுஜன பெரமுன ஒரு சவால்மிக்க அரசியல் சக்தி என்பதை மறந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு பக்கத்தில் தாங்களே அடுத்த அரசாங்கத்தை அமைக்கப் போவதாக கூறுகிறது.
சஜித் பிரேமதாச மற்றொரு பக்கத்தில் புதிய அரசாங்கத்தைப் அமைப்பது பற்றிப் பேசுகிறார்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தற்போதைய நெருக்கடியில் இருந்து நாடு மீளும் என்கிறார் அனுரகுமாரதிசநாயக்க. இவர்களுடன் மல்லுக்கட்ட, சந்திரிகா குமாரதுங்க இரகசியமான முறையில், குமார வெல்கமவின் தலைமையில் மற்றொரு மாற்று அணியை கட்டியெழுப்பி வருகிறார்.
பொதுஜன பெரமுன அரசாங்கம் செல்வாக்கை இழந்திருக்கிறது.
நாட்டின் நிலையும், ஏனைய நெருக்கடிகளும் தற்போதைய அரசாங்கத்தை கோமாளித்தனமான ஒன்றாக விமர்சிக்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
தற்போதைய நெருக்கடிக்கு தாமோ தமது அரசாங்கமோ காரணமல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினாலும், நிலைமைகளைத் திறமையாகச் சமாளிக்கும் திறன் தற்போதைய அரசாங்கத்துக்கு இல்லை என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது.
இந்தநிலையில், தோல்வியடைந்து கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தின் மீது, மக்கள் மீண்டும் ஒரு முறை பந்தயம் கட்டுவதற்கு தயாராக இருப்பார்களா என்ற வலுவானகேள்வி இருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது தான் எதிர்க்கட்சிகளுக்கு உள்ள முக்கியமான சவால்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-06#page-4
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM