வகுப்புகளை இரண்டாகப் பிரித்து கல்வி நடவடிக்கையை தொடரவும் - கல்வி அமைச்சு

05 Mar, 2022 | 07:08 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்) 

திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள பாடசாலை தவணையின் போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை 20 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கான வகுப்புகளையும் தினமும் நடத்தலாம். 

மாணவர்களின் எண்ணிக்கை 21 முதல் 40 வரை இருந்தால், வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஒரு வாரம் இடைவெளியில் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

40 மாணவர்களுக்கு மேல் இருந்தால், மாணவர்களை மூன்று சம பிரிவுகளாகப் பிரித்து வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பாடசாலைக்கு அழைக்கப்படாத மாணவர்களுக்கு மாற்றுக் கற்றல் முறைகளைப் பயன்படுத்தி தொடர்புடைய பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். 

கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் வழமைபோல் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இவ்விடயம் குறித்த விசேட சுற்று நிரூபம் கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் மாகாணங்கள், வலயங்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான கல்வி அதிகாரிகளுக்கும், அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04