(இராஜதுரை ஹஷான்)
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சீராக விநியோகித்தால் மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டிய தேவை கிடையாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நாளை தினமும் நாடுதழுவிய ரீதியில் சுழற்சி முறையில் ஏழரை மணித்தியாலங்கள் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படும்.
அதற்கமைய நாளை காலை 08 மணிமுதல் மாலை 06 மணிவரையான காலப்பகுதியில் 5 மணித்தியாலமும்,மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களும் மின்விநியோகம் சுழற்சி முறையில் துண்டிக்கப்படும்.
இன்றைய தினம் தரையிறக்கப்பட்ட 37,300 மெற்றிக்தொன் டீசலில் 8000 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலை மின்னுற்பத்தி நிலையங்களின் நடவடிக்கைக்கு விநியோகிக்க வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாளை மறுதினம் முதல் மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள்,உராய்வு எண்ணெயை தடையின்றி விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும்,
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான 3000 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே குறிப்பிட்டார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM