இணையவழி சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்காக இலங்கையருக்கு மெல்போர்னில் சிறைத்தண்டனை

Published By: Vishnu

03 Mar, 2022 | 12:40 PM
image

மெல்போர்னில் வசிக்கும் 24 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவருக்கு நேற்று ( 2, மார்ச், 2022) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

25 இணையவழி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்காக குறித்த நபருக்கு 13 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வற்புறுத்தி, தங்களைப் பற்றிய வெளிப்படையான பாலியல் படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு வலியுறுத்தி அந்தரங்க தகவல்களை சந்தேக நபர் பெற்றுள்ளார்.

பின்னர் தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால் பெறப்பட்ட அந்தரங்க தகவல்களை பாதிக்கப்பட்ட சிறுமிகளது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவேன் என்று அச்சுறுத்தல் விடுத்து, பரிமாற்றமும் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள் 2020 செப்டெம்பர் 11 அன்று சந்தேக நபரை பல இணையவழி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்காக கைதுசெய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 14:48:56
news-image

பல பெண்களுக்கு வட்ஸ்அப் செயலியினூடாக ஆபாச...

2025-02-19 14:59:22
news-image

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப்...

2025-02-19 14:25:20
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பின்னால்...

2025-02-19 14:24:32
news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 14:40:07
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-19 14:59:24
news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07