ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போருக்குப் பின்னர் உக்ரேனிலிருந்து பத்து இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரேனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது.
இதனால் உயிரை காத்துக்கொள்வதற்காக உக்ரேன் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

ஒரு வாரத்திற்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் 40 இலட்சம் மக்கள் உக் ரேனை விட்டு வெளியேறக்கூடும் என்று கணித்துள்ளது, ஆனால் அந்த கணிப்பு அதிகரிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.

அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையளர் பிலிப்போ கிராண்டியின் டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"ஏழு நாட்களில் உக்ரைனில் இருந்து பத்து இலட்சம் அகதிகள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் அகதிகளில் அதிகபட்சமாக சுமார் 4.54 இலட்சம் பேர் போலந்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஹங்கேரியில் 1.16 இலட்சத்தினரும், மோல்டோவாவில் 79 ஆயிரம் பேரும், ஐரோப்பிய நாடுகளுக்கு 69 ஆயிரம் பேரும், சுலோவாக்கியாவில் 67 ஆயிரம் பேரும் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அகதிகள் வெளியேற்றமாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது முன்னதாக 2011 இல் சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த போது 56 இலட்சம் மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM