உகண்டாவில் இளம் தாய்மார்கள் மீண்டும் பாடசாலைக்குச் செல்ல அனுமதி

Published By: Digital Desk 3

02 Mar, 2022 | 04:38 PM
image

குழந்தையை பிரசவித்த பெண்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்ல ஊக்குவிக்கும் புதிய கொள்கையை உகண்டா நடைமுறைப்படுத்தியுள்ளது.

பொது முடக்கத்தினால் ஏற்பட்ட  பல பிரச்சினைகளில் ஒன்று 'இளம் வயது கர்ப்பம்' அதிகரித்தமையாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் கணக்கெடுப்பின்படி, உகண்டாவில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 290,219 இளம் வயது கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. 

2020, 2019 ஆண்டு முறையே  354,000 ,358,000  இளம் வயது கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன.

குழந்தைகள் பிறந்த பின்னர் பெண்கள் பாடசாலையில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், இதற்கு மறுக்கும் பாடசாலை அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சில உகண்டா மதத் தலைவர்கள் இந்த மாற்றத்தை எதிர்த்துள்ளனர்.

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு அறிக்கையில், 

2019 ஆம் ஆண்டு முதல் கர்ப்பிணிப் பாடசாலைச் சிறுமிகள் மற்றும் இளம் பருவ தாய்மார்களின் கல்வி  உரிமைகளைப் பாதுகாக்கும் கொள்கைகளை நிறுவிய ஐந்து துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் உகண்டாவும் ஒன்று எனப் பாராட்டியுள்ளது.

மேலும், குறித்த கொள்கை  முப்பது ஆபிரிக்க நாடுகளில் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும்,  இன்னும் சில நாடுகள் இளம் தாய்மார்களையும் கர்ப்பிணிப் பெண்களையும் கல்வி கற்க தடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தன்சானியாவில், முன்னாள் ஜனாதிபதி கர்ப்பிணிப் பெண்களை பாடசாலையில் சேர்க்க தடை விதித்தார், பின்னர் நவம்பர் மாதம் அந்த  கொள்கையை மாற்றியமைத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04