டி.எப்.சி.சி வங்கி மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

Published By: Digital Desk 3

02 Mar, 2022 | 09:17 AM
image

(நா.தனுஜா)

இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சியாண்மைகளுக்கு அவசியமான நிதிவழங்கலை விரிவுபடுத்தி, அதனூடாக தனியார்துறை அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் முன்னிலையில் டி.எப்.சி.சி வங்கிக்கும் அமெரிக்க அரசாங்கத்தின்கீழ் இயங்கும் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்திற்கும் இடையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது. 

டி.எப்.சி.சி வங்கியின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கு அவசியமான நிதியுதவிகளை வழங்குவதானது, தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்கும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் பங்களிப்புச்செய்யும் என்று அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

அதுமாத்திரமன்றி இத்தகைய வலுவான கூட்டிணைவின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சியாண்மைகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கும் வாய்ப்பேற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கான நிதிவழங்கலை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் சந்தைத்தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் குறிப்பாக மேல்மாகாணத்திற்கு வெளியே இயக்குகின்ற மற்றும் பெண்களால் நடாத்தப்படுகின்ற முயற்சியாண்மைகளுக்கான வர்த்தக்குத்தகையை அணுகும் வாய்ப்பை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட டி.எப்.சி.சி வங்கியின் பிரதம நிறைவேற்றுப்பணிப்பாளர் திமால் பெரேரா கூறியதாவது:

'எமது வாடிக்கையாளர்களில் பெருமளவானோர் சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சியாண்மைகளை ஆரம்பித்திருப்பது குறித்தும் அவை வெகுவாக வளர்ச்சிகண்டு, நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கிவருவது குறித்தும் நாம் பெருமையடைகின்றோம். 

அந்தவகையில் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவசியமான பங்களிப்பை வழங்குவதற்கான எமது இயலுமையை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்' என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58