ரஷ்யப் படைகள் உக்ரேனுக்குள் நுழைந்த ஐந்தாவது நாளில், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை பெலருஸ் எல்லையில் ஆரம்பித்துள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் உடனடி போர் நிறுத்தம் மற்றும் ரஷ்ய படைகளை திரும்பப் பெறுதல் ஆகியவையே அதன் முக்கிய இலக்கு என்று கூறியுள்ளது.
இதற்கிடையில் ரஷ்ய தூதுக்குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி, ஒவ்வொரு மணிநேர மோதலும் உக்ரேனிய வீரர்களிடையே புதிய உயிரிழப்புகளை கொண்டு வருவதால், கூடிய விரைவில் எந்த ஒப்பந்தத்தையும் எட்டுவதில் நாங்கள் நிச்சயமாக ஆர்வமாக உள்ளோம்.

ஆனால் அந்த ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்ய வீரர்களை தங்கள் ஆயுதங்களை கீழே வைக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
எவ்வாறெனினும் இந்த பேச்சுவார்த்தையின் இறுதி முடிவுகள் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தொடர்கின்றது.
ஐரோப்பாவில் போர் அதன் ஐந்தாவது நாளுக்குள் நுழையும் வேளையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM