கூட்டமைப்பு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக பிரேரணை கொண்டு வந்தால் ஆதரிப்பேன் - திஸ்ஸ விதாரண

Published By: Digital Desk 4

28 Feb, 2022 | 07:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் யோசனையினை கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு வழங்குவேன் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டார்.

தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவது முற்றிலும் தவறானது - திஸ்ஸ விதாரன  | Virakesari.lk

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தக்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது.யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் நிறைவடைந்த நிலைமையிலும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பது முறையற்றதாகும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக கைது செய்யப்பட்டு நீண்டநாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் பலர் கடந்த காலங்களில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு சார்பாக அமையும் என்ற காரணத்தினார் சர்வதேச நாடுகள் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்துகின்றன.

உலகில் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் நாடுகளி;ல் பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் நடைமுறையில் இல்லை.

இளம் தலைமுறையினர் மத்தியில் தீவிரவாத கொள்கைகள் ஏதும் கிடையாது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் கொண்டு வரும் அனைத்து யோசனைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க தயார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12
news-image

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத...

2025-02-08 16:04:02
news-image

கொழும்பு - வெல்லவாய வீதியில் விபத்து...

2025-02-08 15:43:57
news-image

இராமகிருஷ்ண மிஷனின் கிளை திங்கள் கொட்டகலையில்...

2025-02-08 14:51:08
news-image

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை :...

2025-02-08 15:49:12
news-image

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-08 15:58:20
news-image

பெப்ரவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில்...

2025-02-08 15:16:46