கொவிட் தொற்றுக்கு பின்னரான நோய் நிலைமை குறித்து மதிப்பாய்வுகள் ஆரம்பம்

Published By: Vishnu

27 Feb, 2022 | 05:17 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது கொவிட் தொற்றுக்கு பின்னரான நோய் நிலைமை அதிகரித்து வருகின்ற நிலையில், அவை தொடர்பில் மதிப்பாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 

தற்போது கொவிட் பரவலுக்கு மத்தியில் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அன்றாட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதனை விடுத்து கொவிட் தொற்றுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமைக்கு நாடு திரும்பிக் கொண்டிருக்கிறது என்று யாரேனும் எண்ணுவார்களாயின் அது தவறாகும். மேலும் ஒரு வருட காலத்திற்கு அல்லது அதனை விட அதிக காலம் புதிய பொதுமைப்படுத்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும்.

அத்தோடு கொவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த ஒருவருக்கு , சிறிது காலத்தின் பின்னர் வழமைக்கு மாறான ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவை தொடர்பில் வைத்தியர்களுக்கு அறிவிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். அதற்கமைய வைத்தியர்களால் உரிய சிகிச்சைகள் வழங்கப்படும்.

இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் மதிப்பாய்வு செய்து , கொவிட் தொற்றுக்கு பின்னர் எவ்வாறான நோய் அறிகுறிகள் ஏற்படும் , அவற்றுக்கான காரணம் என்பவை தரவுகளுடன் ஆராயப்பட்டு வருகின்றன. ஆய்வின் பின்னர் அவை தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 12:13:39
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19
news-image

அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை...

2025-03-16 10:13:42
news-image

ஏப்ரல் 10ம் திகதி பட்டலந்த விசாரணை...

2025-03-16 09:49:47