உக்ரைன் இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுடன் 2 ஆவது நாளாக ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
அடக்குமுறையில் இருந்து உக்ரைன் மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனவும் ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரேவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2 ஆவது நாளாகவும் மேற்கொண்டு வருகின்றன.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைனின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் அங்கு நிலவி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
கிவ்வில் இருந்து 3 மைல் தொலைவில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாகவும் உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உக்ரைன் அரசு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, ரஷ்யா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு பயந்து பாதாளத்திற்குள்ளும், சுரங்கப்பாதைகளுக்குள்ளும் மக்கள் பதுங்கியுள்ள நிலையில், அண்டை நாடுகளில் தஞ்சமடைவதோடு, பதுங்கு குழிகளுக்குள் பதுங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இருள் மூழ்கிய அந்த சுரங்கப்பாதைகளுக்குள் உணவு, தண்ணீர் இன்றி பதுங்கியிருக்கும் மக்கள், செல்போன் டார்ச் மூலம் ஒளியேற்றி, இசைக்கருவிகளை இசைத்து பாட்டு பாடி ஒருவருக்கொருவர் ஆறுதலாக பொழுதை கழித்து வருகின்றனர்.
ரஷ்ய படைகள் செர்னோபிலில் உள்ள அணு ஆலையை கைப்பற்ற முயல்வதாகவும், இது ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் எதிரான போர்ப் பிரகடனம் என்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போரின் போது ரஷ்ய தரப்பில் ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புடின் உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதை அந்நாட்டு சிறையில் இருக்கும் எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி கடுமையாக எதிர்த்துள்ளார்.
புடின் ஆட்சியின் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் அரசு பதிலடி கொடுக்க18 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகளை தன்னார்வ தொண்டர்களுக்கு வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM