(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தால் பொருட்களில் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் அல்ல இரண்டாயிரம் ரூபாவையாவது வழங்க வேண்டும்.
அத்துடன் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியால் நாட்டில் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவதாக உறுதியளித்திருந்தது. அப்படியானால் அரசாங்கம் முன்மாதிரியாக அரசாங்கத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்களுக்காவது இதனை வழங்கி இருக்கவேண்டும்.
இப்போது அனைத்து பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரொட்டியும், பருப்பும் சாப்பிட முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையில் ஆயிரம் அல்ல இரண்டாயிரம் ரூபாவையாவது வழங்க வேண்டும், ஆகக் குறைந்த சம்பள சட்டத்தை கொண்டு வந்திருந்தால் ஆயிரம் ரூபாவை வழங்கியிருக்கலாம்.
ஆனால் அதனை அரசாங்கம் செய்யவில்லை. மாறாக சாப்பு கடை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து ஆயிரம் ரூபா பம்பளம் அதிகரிக்க முற்பட்டதால் கம்பனிகள் நீதிமன்றம் சென்றன.
மேலும் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்து 5000 மில்லியன் டொலர் லாபமீட்டவுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆனால் கடந்த காலங்களில் அரசாங்கம் தரமான உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
அத்துடன் ஒரு அரிசியையேனும் இறக்குமதி செய்ய மாட்டோம் என்றே விவசாய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது 35 கோடி கிலோ அரிசியை கடந்த மூன்று மாதத்தில் கொண்டுவந்துள்ளனர். இதனால் நாட்டில் இருக்கும் சிறிய அரிசி ஆலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இதேவேளை தற்போது நாட்டில் பெரிய பிரச்சினையாக எரிபொருள் உள்ளது.
கடலில் மூன்று நாட்களாக கப்பல் இருந்தாலும் அதில் இருந்து எரிபொருளை இறக்க டொலர் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியால் அனைத்து தொழிற்துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. அரசாங்கத்தின் இயலாமையே இதற்கு காரணமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM