மத்திய மலை நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பிரதான நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக நீர் தேக்கங்களின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர் மட்டம் 34.4 கன அடியாக குறைவடைந்துள்ளதாக நீர் தேக்க பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது வான்பாயும் மட்டத்தை விட குறைவு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அந்த பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்த போதும் அது நீர் நிறைய போதுமானதாக இல்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தொடரும் இந்த நிலைமையால் காசல்ரீ நீர்தேக்கத்தில் இருந்து நீரை பெறும் விமல சுரேந்திர, லக்ஸபான மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர் தேக்கங்களில் நீர் மின் உற்பத்தியும் குறைவடைந்துள்ளது.
இதன் தாக்கத்தால் களனி கங்கையின் நீர்மட்டமும் குறைவடையும் அபாயத்தை எதிர்க்கொண்டுள்ளதாகவும்; இதனால் அந்த கங்கையின் நீரை குடிப்பதற்காக பயன்படுத்துவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்து வருவதால் நீர் நிலைகளின் அடிப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் படிப்படியாக வெளிப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாறு நீர் நிலைகள் வற்ற தொடங்கியுள்ளதால் வெற்று இடத்தில் சிறுவர்கள் விளையாடி வருவதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM