அனைவரும் கண்ட கனவு பகல் கனவாக மாறியுள்ளது - உதயகுமார் 

22 Feb, 2022 | 11:48 AM
image

(க.கிஷாந்தன்)

ஆட்சிக்கு வரும் போது பலர் பல்வேறு கதைகளை கூறினார்கள், அவர் கண்ட கனவு நனவாகிறது. இவர் கண்ட கனவு நனவாகிறது என்றெல்லாம் சொன்னார்கள். 

ஆனால் இப்போது எல்லோரும் கண்ட கனவு பகல் கனவாக மாறியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

கொட்டகலை போகாவத்தை பகுதியில் முன்னாள் அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்து  தெரிவிக்கையில்,

மலையகத்தினை பொருத்த வரையில் அமைச்சர் திகாம்பரம் அமைச்சராக இருந்த போது மலையக மக்களுக்கு பாரிய அளவில் சேவை செய்தார். 

தனி வீடுகளை கட்டிக்கொடுத்தார், உரிமைகளை பெற்றுக்கொடுத்தார் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுத்தார். ஆனால் அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள்.

ஒரு வீடமைப்பு திட்டத்தை கூட ஆரம்பிக்கவில்லை,மாறாக கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்.

கொட்டகலை பகுதியில் மாத்திரம் எனக்கு நினைவிருக்கும் வரையில் கொட்டகலை, போகாவத்தை, ஹரிங்டன் குயின்ஸ்பெரி என கொட்டகலை பகுதியில் மாத்திரம் சுமார் 350 இற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. 

அப்போது இருபது பேர்ச் காணியில் வீடு கட்டி தருவேன் என்றார்கள்.

திகாம்பரம் அமைச்சுப்பதவி ஏற்கும் போது  மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு என்று ஒரு புதிய அமைச்சு உருவாக்கப்பட்டது. 

ஆனால் இந்த அரசாங்கம் வந்ததும் தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால் அந்த அமைச்சிலும் வீடமைப்புமில்லை உட்கட்டமைப்புமில்லை. இப்போது அது கோதுமை விநியோகிக்கும் ராஜாங்க அமைச்சாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக மலைநாட்டு புதிய கிராமங்கள் வீடமைப்பு அமைச்சுக்கு விருது கிடைத்தது, இப்போது விருது வழங்க வேண்டும் என்றால் வேலை செய்யமைக்காகவே விருது வழங்க வேண்டும். 

மூன்று வேளை சாப்பிட முடியாது மிகவும் துன்பப்படுகிறார் ஆனால் இன்றுள்ளவர்கள் உள்ளாச பூங்கா அமைத்துக்கொண்டிருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31