(இராஜதுரை ஹஷான்)
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவிற்கு டொலர் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் தற்போது ரூபா இருப்பிற்கும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாக என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அத்துடன் எரிபொருளின் விலையை அதிகரிக்காவிடின் எரிபொருள் கொள்வனவிற்கான ரூபாவை திரட்டிக்கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.
எரிபொருள் விநியோகத்தில் பாரிய நட்டத்தை கூட்டுத்தாபனம் எதிர்ககொள்கிறது. எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பலமுறை கோரிக்கையை முன்வைத்துள்ளது.
தற்போதைய நிலைமையில் எரிபொருளின் விலையை அதிகரிக்காவிடின் எரிபொருள் இறக்குமதிக்கான ரூபாவை கூட திரட்டிக்கொள்ள முடியாத நிலைமை தோற்றம் பெறும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், தற்போதைய நிலைமையில் எரிபொருளின் விலையை அதிகரிப்பது கட்டாயமானதாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் சர்வதேச ஊடாக சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM