1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை முன்னெடுக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
உக்ரேன் தலைநகர் கியேவை சுற்றி வளைக்கும் படையெடுப்பை ரஷ்யா நடத்த உத்தேசித்துள்ளதாக உளவுத்துறை தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை கிழக்கு உக்ரேனில் கிட்டத்தட்ட 2,000 போர்நிறுத்த மீறல்கள் சனிக்கிழமையன்று ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கண்காணிப்பாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தியுள்ளன.
இந் நிலையில் உக்ரேனின் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, நாட்டின் கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் மொஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு மேற்கு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
சனிக்கிழமையன்று Munich பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய Zelenskyy, உக்ரைனுக்கு புதிய உத்தரவாதங்களை வழங்க ஜேர்மனி மற்றும் துருக்கியுடன் ரஷ்யாவை உள்ளடக்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்ட விரும்புவதாக கூறினார்.
உக்ரேனிய அரசாங்கமும் பிரிவினைவாத சக்திகளும் 2014 இல் இருந்து கிழக்கு உக்ரேனில் சண்டையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM