(என்.வீ.ஏ.)
கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற விறுவிறுப்பான 2 ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 8 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க, 2 - 0 என்ற ஆட்டக்கணக்கில் இந்தியா தொடரை தனதாக்கிக்கொண்டது.
முன்னாள் அணித் தலைவர் விராட் கோஹ்லி, ரிஷாப் பன்ட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்களும் கடைசிக் கட்டத்தில் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றது.
இஷான் கிஷான் (2), ரோஹித் ஷர்மா (19), சூரியகுமார் யாதவ் (8) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஆனால், விராட் கோஹ்லி 52 ஓட்டங்களையும் ரிஷாப் பன்ட் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும் வெங்கடேஷ் ஐயர் 33 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியைப் பலப்படுத்தினர்.
இதனிடைவே விராத் கோஹ்லி, ரிஷாப் பன்ட் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களையும் ரிஷாப் பன்ட், வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் 5 ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ஆரம்ப வீரர்களான கய்ல் மேயர்ஸ் (9), ப்ரெண்டன் கிங் (22) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் ஜோடி சேர்ந்த நிக்கலஸ் பூரனும் ரோவ்மன் பவலும் 3ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு அச்சமூட்னர்.
பூரன் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 15 பந்துகளில் 28 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஆனால், இந்திய பந்துவிச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் பந்துவீச்சி 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.
ரோவ்மன் பவல் 36 பந்தகளை எதிர்கொண்டு 5 சிக்ஸ்கள், 4 பவுண்ட்றிகள் அடங்கலாக 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM