(நெவில் அன்தனி)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாட 3 ஆவது அணியாக கிழக்கு மாகாணம் தகுதிபெற்றுள்ளது.
கிழக்கு மாகாணஅணி
மாத்தறையில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற 6ஆம் கட்ட லீக் போட்டியில் 3 - 0 என்ற கோல்கள் கணக்கில் மேல் மாகாணத்தை வெற்றிகொண்டதன் மூலம் கிழக்கு மாகாணம் 3ஆவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சுற்றுப் போட்டி விதிகளுக்கு அமைய 2 அணிகள் சம் புள்ளிகளைக் கொண்டிருந்தால் அந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான (ஹெட் டூ ஹெட்) போட்டியில் வெற்றி பெற்ற அணியே தரப்படுத்தலில் முன்னிலை பெறும்.
இந்த விதிகளுக்கு அமைய மேல் மாகாணம் கடைசிப் போட்டியில் வட மாகாணத்தை வெற்றிகொண்டு 10 புள்ளிகளைப் பெற்றாலும்கூட நேருக்கு நேர் போட்டியில் மேல் மாகாணத்தை கிழக்கு மாகாணம் வெற்றிகொண்டுள்ளதால் அரை இறுதி வாய்ப்பை கிழக்கு மாகாணம், செவ்வாய்க்கிழமை போட்டி முடிவுடன் உறுதி செய்து கொண்டுள்ளதாக சம்மேளன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தென் மாகாணம்
இதன் காரணமாக அரை இறுதியில் விளையாடவுள்ள 4ஆவது அணி எது என்ற போட்டி தென் மாகாணத்துக்கும் மேல் மாகாணத்துக்கும் இடையில் நிலவுகின்றது.
கிழக்கு மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்கும் இடையில் நடைபெறவுளள கடைசி லீக் போட்டி வேற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் அல்லது தென் மாகாணம் வெற்றிபெற்றால் 4ஆவது அணியாக தென் மாகாண அணி அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.
தென் மாகாணம் தோல்வி அடைந்து வட மாகாணத்தை மேல் மாகாணம் வெற்றிகொண்டால் போடப்பட்ட கொல்களின் அடிப்படையில் மேல் மாகாணம் 4ஆவது அணியாக அரை இறுதிக்கு முன்னேறும்.
மேல் மாகாணம்
அணிகளின் தற்போதைய புள்ளிகள் நிலைவரப்படி சப்ரகமுவ மாகாணம் (14 புள்ளிகள்), வட மாகாணம் (12 புள்ளிகள்), கிழக்கு மாகாணம் (10 புள்ளிகள்) ஆகிய 3 அணிகள் அரை இறுதியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டுள்ளன.
தென் மாகாணம் (10), மேல் மாகாணம் (07) ஆகிய இரண்டு அணிகளில் கடைசி அணியாக அரை இறுதி வாய்ப்பை பெறும் அணி எது என்பது மேல் மாகாணத்துக்கும் வட மாகாணத்துக்கும் இடையிலான போட்டி, கிழக்கு மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்கும் இடையிலான போட்டி ஆகியவற்றின் முடிவுகளிலேயே தங்கி இருக்கின்றது.
எனவே இந்த நான்கு போட்டிகள் சம்பந்தப்பட்ட இரண்டு போட்டிகளும் ஏக காலத்தில் நடத்தப்படுவதே சிறந்தது என கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM