சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே ஷெஹான் மாலகவை கைது செய்தோம் - பொலிஸ்

Published By: Digital Desk 3

16 Feb, 2022 | 07:10 PM
image

(எம்.மனோசித்ரா)

சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே கைது செய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் , சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவினரால் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து பொலிஸ் தலைமையகம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளதாவது,

ஷெஹான் மாலக என்ற சந்தேகநபர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த திங்களன்று கைது செய்யப்பட்டமை குறித்து பல்வேறு தரப்பினரால் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் நீண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

குறித்த விசாரணை தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கமையவே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சட்டமா அதிபரினால் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி கடிதம் மூலம் குற்ற விசாரணைப்பிரிவின் பணிப்பாளருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையில் , 'குறித்த சந்தேகநபர் இலங்கை தண்டனை சட்டக் கோவையின் 120 ஆவது உறுப்புரைக்கமைய குற்றமிழைத்துள்ளதாகவும் , அதற்கமைய அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும்' குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஆலோசனைக்கமையவே குற்ற விசாரணைப்பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08