(எம்.மனோசித்ரா)
சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே கைது செய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் , சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவினரால் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து பொலிஸ் தலைமையகம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளதாவது,
ஷெஹான் மாலக என்ற சந்தேகநபர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த திங்களன்று கைது செய்யப்பட்டமை குறித்து பல்வேறு தரப்பினரால் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் நீண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த விசாரணை தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கமையவே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சட்டமா அதிபரினால் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி கடிதம் மூலம் குற்ற விசாரணைப்பிரிவின் பணிப்பாளருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையில் , 'குறித்த சந்தேகநபர் இலங்கை தண்டனை சட்டக் கோவையின் 120 ஆவது உறுப்புரைக்கமைய குற்றமிழைத்துள்ளதாகவும் , அதற்கமைய அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும்' குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட ஆலோசனைக்கமையவே குற்ற விசாரணைப்பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM