(எம்.எப்.எம்.பஸீர்)
நடை பெற்றுக்கண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைகளில், வெலிகம - கொக்மாதுவ பிரதேசத்தின் விகாரை ஒன்றின் பிக்கு ஒருவருக்காக, போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பரீட்சை எழுதிய மற்றொரு பிக்குவை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் புனித மரியாள் தமிழ் வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து நேற்று (15) குறித்த பிக்குவைக் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.
குறித்த பரீட்சை நிலையத்தில், 4 ஆவது நாளாக அந்த பிக்கு நேற்று க.பொ.த. உயர் தர பரீட்சையின் சிங்களம் - பகுதி 2 பரீட்சை எழுதிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட சந்தேகத்துக்கு அமைய அவர் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே கைது செய்யப்பட்டுள்ள குறித்த பிக்கு, பெலி அத்த , இசுருபுர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர்.
கைதான பிக்குவை, புத்தளம் நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM