12 ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு கோடியில் பணப்பரிசு

Published By: Digital Desk 4

15 Feb, 2022 | 05:41 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்தில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 12 ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 26 கோடியே 73 இலட்சத்து 10,692 ரூபா பணப்பரிசாக கிடைக்கவுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் சம்பியன் அணிக்கு வழங்கப்பட்ட பணப்பரிசைவிட இது இரட்டிப்பு மடங்காகும்.

இந்த வருடத்துக்கான மொத்த பணப்பரிசு 75 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

போட்டியில் பங்குபற்றும் சகல அணிகளுக்கும் வழங்கப்படும் மொத்தப் பணப்பரிசு 70 கோடி ரூபாவுக்கு சற்று அதிகமாகும்.

முதல் சுற்றுடன் வெளியேறும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோடியே 41 இலட்சம் ரூபாவுக்கு மேல் கிடைக்கும்.

அரை இறுதிகளில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா 6 கோடியே 7 இலட்சத்து 53,430 ரூபா கிடைக்கும்.

இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 12 கோடியே 15 இலட்சத்து 4,860 ரூபா பணப்பரிசு காத்திருக்கின்றது.

இவற்றைவிட 28 போட்டிகளைக் கொண்ட லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் 50 இலட்சத்து 62,702 ரூபா பணம் பரிசு வழங்கப்படும்.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 8 நாடுகள் பங்குபற்றும் மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி மார்ச் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

டவ்ரங்கா, பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வரவேற்பு நாடான நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது.

முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று ஒரு தடவை எதிர்த்தாடும். இதன்படி முதல் சுற்றில் 28 லீக் போட்டிகள் நடைபெறும்.

மார்ச் 27ஆம் திகதியுடன் நிறைவுபெறும் முதல் சுற்றில் அணிகள் நிலையில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

முதலாவது அரை இறுதிப் போட்டி மார்ச் 30ஆம் திகதியும் 2ஆவது அரை இறுதிப் போட்டி மார்ச் 31ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஏப்ரல் 3ஆம் திகதியும் நடைபெறும். இப் போட்டிகளுக்கு மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 6 தடவைகளும் இங்கிலாந்து 4 தடவைகளும் நியூஸிலாந்து ஒரு தடவையும் சம்பியனாகியுள்ளன.

இந்த 3 நாடுகளைவிட இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளே இறுதி ஆட்டங்களில் விளையாடியுள்ள மற்றைய 2 நாடுகளாகும். பங்களாதேஷ் இந்த வருடம் முதல் தடவையாக மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00