இராணுவத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், காயமடைந்த,ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கான வீடமைப்பு திட்டத்தின் 7 வது சட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் நிகழ்வு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 48 வீடுகளின் நிர்மாண பணிகளுக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டதுடன், 11 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும் 37 வீடுகள் பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் நிர்மாண பணிகளை முழுமைப்படுத்துவதற்குமாக மேற்படி நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தினூடாக முழுமையாக புதிய வீடொன்றை நிர்மாணித்துகொள்ள 1.5 மில்லியன் மற்றும் பகுதியளவில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 750,000 ரூபாயும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது போரில் வீர மரணம் எய்திய 9 வீரர்களின் குடும்பத்தினரும், காயமடைந்த 12 வீரர்கள், 03 ஓய்வுபெற்ற வீரர்கள் மற்றும் சேவையிலிருக்கும் 24 இராணுவ வீரர்களும் குறித்த நிதியுதவியினை பெற்றுக்கொள்ளும் முகமாக கலந்துகொண்டிருந்தனர்.
இது வரையில் இத்திட்டத்தின் கீழ் 244 முழுமையான வீடுகளை நிறுவதற்கும் 24 பகுதியளவான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM