எரிபொருள் விலை சூத்திரத்தை மங்கள கொண்டுவந்தபோது அதனை விமர்சித்தவர்கள் தற்போது விலை சூத்திரத்தை  கொண்டுவரப்போகின்றனர் - ஹர்ஷ டி சில்வா

Published By: Digital Desk 4

14 Feb, 2022 | 05:11 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மங்கள சமரவீர எரிபொருள் விலை சூத்திரம் கொண்டுவந்தபோது அதனை விமர்சித்தவர்கள் தான் தற்போது விலை சூத்திரம் கொண்டுவரப்போகின்றனர்.

விலை சூத்திரம் பாரியதொரு விடயமல்ல. என்றாலும் புத்தியை பாவித்து  தயாரிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா தெரிவித்தார்.

வட்டிவீதங்கள் தற்போது மிகவும் எதிர்மறையான மட்டத்தில் காணப்படுகின்றது - ஹர்ஷ  டி சில்வா | Virakesari.lk

எரிபொருள் விலை சூத்திரத்தின் வரைபு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உலகில் அதிகமான நாடுகளில் விலை சூத்திரம் தயாரிக்கப்படுகின்றது. அதனை தயாரிக்கும்போது மிகவும் சிந்தித்து செயற்படவேண்டும்.

எமது ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர எரிபொருள் விலை சூத்திரம் தயாரித்து நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் எரிபொருள் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

 ஆனால் மங்கள சமரவீரவின் எரிபொருள் விலை சூதிதிரத்தை அன்று கடுமையாக விமர்சித்தார்கள். அவ்வாறு விமர்சித்தவர்கள்தான் தற்போது விலை சூத்திரம் கொண்டுவருவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் 2020 ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மரை பெறுமானத்துக்கு வந்தது. ஆனால் எமது நாட்டில் எரிபொருளின் விலை குறைத்து அதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்கவில்லை.

விலை சூத்திரத்தினால் இடம்பெறுவது, உலக சந்தையில் விலை குறையும்போது அதன் நன்மை முழுமையாக நுகர்வோருக்கு கிடைப்பதாகும். அதேபோன்று விலை அதிகரிக்கும்போது அதன் வரி அதிகரிப்பும் நுகர்வோருக்கு தாக்கம் செலுத்தும். 

என்றாலும் விலை சூத்திரம் தயாரித்து அதன் விலை ஏற்ற இறக்கத்தை குறைத்துக்கொள்ள எங்களுக்கு வரைபொன்றை தயாரித்துக்கொள்ள முடியும். அதற்குள் விலை கூடி, குறையலாம்.

இவ்வாறான விலை சூத்திரம் உலகில் அனைத்து நாடுகளிலும் இருக்கின்றது. இது பாரியதொரு விடயமில்ல. என்றாலும் புத்தியை பாவித்து விலை சூத்திரத்தை சரியாக தயாரிக்கவேண்டும்.

என்றாலும் தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பதை கருத்திற்கொண்டு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலை அதிகரித்திருக்கின்றது. அதனையும் விட சிபெட்கோ நிறுவனம் விரைவில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பது நிச்சயமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம்...

2026-01-18 19:21:04
news-image

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் 21ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்...

2026-01-18 17:25:12
news-image

“வாழ்நாள் சாதனையாளர் விருது” பெறும் 5...

2026-01-18 19:11:24
news-image

அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ...

2026-01-18 19:15:36
news-image

கசிப்பு வியாபாரியை கைதுசெய்யச் சென்ற பொலிஸாரை...

2026-01-18 18:40:51
news-image

யாழில் போதைப்பொருளை விற்க முயன்ற இரு...

2026-01-18 18:26:42
news-image

மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மோட்டார்...

2026-01-18 18:19:28
news-image

2025 நவம்பருக்குள் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்...

2026-01-18 17:58:32
news-image

நாட்டில் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவுமான...

2026-01-18 18:14:12
news-image

யாழில் கோர விபத்து - ஒருவர்...

2026-01-18 17:47:20
news-image

பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்...

2026-01-18 18:05:04
news-image

மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகால உறுப்பினரான...

2026-01-18 16:52:59