காதலர் தினம் ; விருந்துபசார நிகழ்வுகள் குறித்து அவதானம் செலுத்துமாறு பொலிஸாருக்கு அறிவிப்பு

Published By: Vishnu

14 Feb, 2022 | 02:11 PM
image

சமூக ஊடக தளமான பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் சம்பந்தப்பட்ட இரண்டு விருந்துபசார நிகழ்வுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், தஹையாகம ஹோட்டல் ஒன்றில் விருந்தொன்றில் ஐஸ், கஞ்சா உள்ளிட்ட பல போதைப் பொருட்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, கண்டியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப் பொருள்களுடன் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக ஹோட்டல்களில் விருந்துபசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

இதேவ‍ேளை காதலர் தினமான இன்றைய தினம் ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வுகளில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறு நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38