லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஸ்தலத்திலேயே உடல் கருகி பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பலியான நபர் லெம்லியர் தோட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
குறித்த தீ விபத்து இன்று காலை 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இந்த உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த போது உடையில் பரவிய தீ யின் காரணமாகவே முதியவர் பலியாகி இருக்க கூடும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை காவல்துறை முன்னெடுத்து வரும் நிலையில் பிரேத பரிசோதனைகளுக்காக சடலமானது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM