(எம்.எப்.எம்.பஸீர்)
வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகநபர்களான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் அவரது மனைவி ஆயிஷாவுக்கும் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப்பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திரா ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆஜராகி நகர்த்தல் பத்திரம் ஊடாக முன்வைத்த விசேட கோரிக்கையை ஏற்றே இந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது.
அதன்படி எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதிவரை அவ்விருவருக்கும் விதிக்கப்பட்ட வெளிநாட்டுப்பயணத்தடையைத் தற்காலிகமாகத் தளர்த்துவதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு மேலதிக நீதிவான் ரஜீந்திரா ஜயசூரிய அறிவித்து உத்தரவிட்டார்.
18 வயதின் கீழான ஒருவரை அடிமைத்தனத்துக்கு அல்லது கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தியமை, துன்புறுத்தலுக்கு உட்படுத்தியமை, கடத்தல் அல்லது சுரண்டலுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தரகரான பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர், ரிஷாத்தின் மாமனாரான அலி இப்ராஹீம் சாஹிபு இகிதர் மொஹம்மட் சிஹாப்தீன், ரிஷாத் பதியுதீனின் மனைவி கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் ஆயிஷா, கிதர், மொஹம்மட் சிஹாப்தீன் இஸ்மத், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் சந்தேகநபர்களாகக் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே நேற்று மூன்றாவது சந்தேகநபர் ரிஷாட்டின் மனைவியான ஆயிஷா, 5 ஆவது சந்தேகநபர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்காக மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா முன்னிலையானார்.
குறித்த இரு சந்தேகநபர்களுக்கும் கட்டார் நாட்டில் இடம்பெறும் மாநாடு, கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ளவேண்டியிருப்பதாக அதற்குரிய ஆவணங்களை முன்வைத்து சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதிவான் ரஜீந்திரா ஜயசூரிய பயணத்தடையைத் தற்காலிகமாகத் தளர்த்தி, அது தொடர்பில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க நீதிமன்றப்பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
இதற்காக மூன்றாம், ஐந்தாம் சந்தேகநபர்கள் தங்களுக்கு ஏற்கனவே பிணையாளர்களாக நின்றவர்களுக்கு மேலதிகமான மேலும் இரு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையாளர்கள் இருவரை நீதிமன்றில் நிறுத்தவேண்டும் எனவும் நீதிவான் அறிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM