நல்லிணக்கம் தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து நல்லிணக்க செயலணியின் அங்கத்தவரான காமினி வியன்கொட தெரிவிக்கையில்,
நல்லிணக்கம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை பெறுவதற்காக பல்வேறு அமர்வுகள் பிரதேச மட்டத்திலான செயலணிகள் உருவாக்கப்பட்டு மக்களின் கருத்துகள் திரட்டப்பட்டிருந்தன.
அதன் பிரகாராம் பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
நல்லிணக்கத்திற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கையில் நெறிப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனையடுத்து குறித்த இறுதி அறிக்கையை எதிர்வரும் 15 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கவுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM