(ஏ.என்.ஐ)
ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் அரசு இயந்திரங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமை உட்பட ஏனைய காரணிகளின் அடிப்படையில் 147 தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திற்கு விரோதமாக பாகிஸ்தானில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்கல்வி ஆணையம் அத்தகைய சட்டவிரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களை அடையாளம் காண்பதில் மட்டுமே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறது என்பதும் வெளிப்பட்டுள்ளது.
அதேசமயம் மாகாண அமைப்புகள் இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எதிராக செயல்படாமல் இருக்கின்றன என்று பாகிஸ்தானின் டான் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தனியார் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு உயர்கல்வி ஆணையம் எச்சரித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத 96 தனியார் பல்கலைக்கழகங்களுடன் பஞ்சாப் முன்னணியில் இருப்பதாக மாகாண வாரியான தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால் இன்னும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பல பட்டப்படிப்பு திட்டங்களை குறித்த பல்கலைக்கழகங்கள் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
சிந்துவில் 35 சட்டவிரோத பல்கலைக்கழகங்கள் உள்ளன, பெரும்பாலும் கராச்சியில் - 11 , கைபர் பக்துன்க்வாவில் 11, உள்ளதுடன் இஸ்லாமாபாத்தில் இரண்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM