(எம்.ஆர்.எம்.வசீம்)
சுகாதார துறையின் தாதியர், உதவி வைத்தியர்கள் உட்பட ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு முரண்பாடுகளை நீக்குதல் உட்பட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும்வரை தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம் என சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணை அமைப்பாளர் சமன் ரத்னப்பிரய தெரிவித்தார்.
தாதியர், உதவி வைத்திய சேவையாளர்கள் உட்பட 18 தொழிற்சங்கங்கள் நேற்று முன்னெடுத்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை சுகாதார துறையின் 18 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்திருக்கும் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவே தீர்மானித்திருக்கின்றோம். அதன் பிரகாரம் இன்றைய தினம் மதியம் சுகாதார அமைச்சுக்கு முன்னால் பாரியதொரு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்.
அத்துடன் சிறுவர் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை, சிறு நீரகம் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை உட்பட மத்திய இரத்த வங்கிகளில் தற்போதைக்கு பணி பகிஷ்கரிப்பு போராட்டம் இடம்பெறுவதில்லை. என்றாலும் எமது கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு கிடைக்காவிட்டால் இந்த இடங்களிலும் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவேண்டி ஏற்படும்.
சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் இருப்பதாலே பணிபகிஷ்கரிப்பு வரை செல்வதற்கு காரணமாகி இருக்கின்றது.
கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சின் செயலாளர் பணிப்பாளர் நாயகம் உட்பட அதிகாரிகளுடன் ஆராேக்கியமானதொரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் அதன் மூலம் தீர்வு கிடைக்கவில்லை.
அதனால் எமது கோரிக்கைகளுக்கு தீர்வி கிடைக்கும்வரை பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதை தவிர எமக்கு வேறு மாற்றுவழி இல்லை. எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சரோ சுகாதார அமைச்சோ தயாராக இல்லை. ஆனால் இவர்கள் வேறு பிரச்சினைகள் உருவாக்கி, தொழிற்சங்க போராட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
அத்துடன் சுகாதார ஊழியர்களினட 7 கோரிக்கைகளில் 4 கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றி இருப்பதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துவரும் கருத்தில் எந்த உண்மையும் இல்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM