15 நாட்களாக தேடப்பட்டு வந்த நபர் வயல் வெளியிலிருந்து சடலமாக மீட்பு 

Published By: Digital Desk 4

07 Feb, 2022 | 06:21 PM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதியில் இன்று திங்கட்கிழமை (07) சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

வயல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி வாழைச்சேனை பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் - மயிலங்கரைச்சை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய சீனித்தம்பி யோகராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 15 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றதாகவும், அவரை தேடி வந்ததாகவும் அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். 

இதையடுத்து வயலில் இருந்து  மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:53:21
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22
news-image

2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-02-17 13:04:29
news-image

தம்மென்னாவ வனப்பகுதியில் 8,516 கஞ்சா செடிகள்...

2025-02-17 12:55:58
news-image

கடும் வெப்பம் ; விளையாட்டு பயிற்சிகளில்...

2025-02-17 12:42:39
news-image

அநுராதபுரத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2025-02-17 12:21:22
news-image

வாடகை வாகனத்தில் பயணிக்கும் போர்வையில் கொள்ளை...

2025-02-17 12:07:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-17 12:33:31
news-image

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல்...

2025-02-17 13:39:08
news-image

பாமன்கடையில் மின் கம்பத்தில் மோதி கார்...

2025-02-17 12:05:26
news-image

சஜித் தலைமையில் சகல எதிர்க்கட்சித் தலைவர்களும்...

2025-02-17 12:01:13
news-image

இராட்டினத்தில் விளையாடிக்கொண்டிருந்த இருவர் கீழே வீழ்ந்து...

2025-02-17 11:33:45