(ஜெ.அனோஜன்)
கொவிட்-19 தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவுக்கான திட்டமிடப்பட்ட பயணத்தைத் தவறவிட்ட வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரொமேஷ் ரத்நாயக்க ஆகியோர் இன்று (07) இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொண்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்கு புறப்படுவதற்கு முன், மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் நுவான் துஷார மற்றும் ரொமேஷ் ரத்நாயக்க ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதன் காரணமாக பெப்ரவரி 3 ஆம் திகதி அவுஸ்திரோலியாவுக்கு புறப்பட்ட இலங்கை அணியில் இவர்கள் இருவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
பின்னர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்துள்ளனர்.
இந் நிலையில் பெப்ரவரி 5 ஆம் திகதி அவுஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்பட்ட இவர்கள் தற்சமயம் சிட்டினியில் உள்ள இலங்கை அணியுடன் இணைந்து கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM