மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலி அறுப்பு ; சந்தேக நபர் மடக்கி பிடிப்பு

Published By: Vishnu

06 Feb, 2022 | 04:19 PM
image

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த பெண் ஒருவரை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற ஒருவர், பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தொடுத்து தப்பி ஒடிய நபரை பொது மக்கள் மடிக்கி பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில் இரண்டாம் குறுக்கு வீதியில் சம்பவதினமான நேற்று மாலை பெண் ஒருவர் மரக்கறிகளை கொள்வனது செய்துவிட்டு மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பின்னால் பிறிதொரு மோட்டர் சைக்கிளில் வந்த ஒருவர் பெண்ணின் கழுத்தில் இருந்த 2 அரை பவுண் எடை கொண்ட தங்க சங்கிலியை அறுத்தொடுத்து தப்பி ஓடியுள்ளார்.

சந்தேக நபரின் மோட்டர் சைக்கிள் இலக்கத்தையும் அவரின் அடையாளம் கண்டு கொண்ட பெண் உடனடியாக தனது மகனுக்கு தொலைபேசியில்  தெரிவித்ததையடுத்து குறித்த பெண்ணி மகன் மற்றும் அங்கிருந்த அவனது நண்பர்கள் மோட்டர்சைக்கிளில் சென்ற சந்தேக நபரை வழிமறித்து மடக்கி பிடித்து கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைதான சந்தேக நபர் வாழைச்சேனை பகுதியை சேர்ந்தவர் எனவும், அபகரித்த தங்க சங்கிலியை வீதியில் வீசியுள்ளதாகவும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

வீதியில் வீசிய தங்க சங்கிலியை பொலிஸாரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் தேடிய போதும் எதுவும் கிடைக்கவில்லை 

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 8 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18