(செய்திப்பிரிவு)
கொழும்பு - வெள்ளவத்தை கடற்பரப்பில் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட இரு சடலங்களும் ஆண்களுடையது எனவும் சடலங்கள் குறித்து இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையெனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களில் ஒன்று வெள்ளவத்தை பொலிஸ் பிரவுக்குட்பட்ட முவர் வீதியை அண்மித்த கடற்கரை பகுதியிலிருந்தும் மற்றைய சடலம் இராமகிருஷ்ணா வீதியை அண்மித்த கடற்கரை பகுதியில் இருந்தும் மீட்கப்பட்டன.
65 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமும், இளைஞர் ஒருவருடைய சடலம் ஒன்றும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளாக வெள்ளவத்தை பொலிஸார் குறிப்பிட்டனர்.
மீட்கப்பட்ட சடலங்களும் களுபோவில வைத்தியசாலைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் குறிப்பிட்டனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM