(க.கிஷாந்தன்)
எமது நாட்டில் 74 வது சுத்திரதினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அது ஒரு கொண்டாட்டமாகவே வருடந்தோறும் கொண்டாடப்படுகின்றதே ஒழிய மலையக மக்களுக்கு முழுமையான சுதந்திரம் தினம் கொண்டாடுவதற்குரிய உரிமையினை ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து ஆராய்ந்தாவது அவர்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுத்து முழுமையான சுதந்திரத்தினை அனுபவிக்கக்கூடிய நிலையினை ஏற்படுத்த வேண்டும் என மலையக காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான செயப்பாட்டாளர் தங்கவேலு கணேசலிங்கம் தெரிவித்தார்.
அட்டன் பகுதியில் நேற்று (04.02.2022) சுதந்திர தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் இன்று 74 வது சுதந்திரம் கொண்டாடப்படுகின்ற நாளிலே, வெறுமனே இது கொண்டாட்டமாக கொண்டாடப்படுகின்றதா? அல்லது பெற்ற சுதந்திரத்தினை அனுபவிக்கக்கூடிய நாளா? என கேள்வியினை கேட்கத்தோன்றுகிறது.
கடந்த காலங்களில் மக்களின் நலத்திற்காக மக்களுடைய சுதந்திரத்திற்காக நாங்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை செய்து வந்தோம் ஆனால் இன்று கொரோனா தொற்று பரவல் காரணமாக அதனை செய்ய முடியாது எனவே தாங்கள் இந்த ஊடகங்கய் வாயிலாக செய்தியினை வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருக்கிறோம்.
பெருமளவாக 74 வருடங்கள் இந்த சுதந்திரதினத்தினை கொண்டாடுகின்ற நிலையில் மலையக மக்கள் அந்த சுதந்திரத்தினை அனுபவிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.ஏன் என்றால் இவர்களுக்கு காணியுரிமையில்லை, வீட்டு உரிமையில்லை, அரச சேவையினை பெற்றுக்கொள்ளுகின்ற உரிமையில்லை.
இன்னும் தோட்ட நிர்வாகத்தின் கீழ் ஒரு அடிமையாக கொண்டு செல்கின்ற ஒரு நிலைமையினை தான் பெருந்தோட்ட சமூகத்திற்கு இருக்கின்றன.
ஆகவே இந்த சுதந்திரதினத்தினை முற்று ழுழுவதுமாக கொண்டாட முடியாதவர்களாகவும் அதிலே உள்வாங்கப்பட முடியாதவர்களாகவும் இருக்கின்றோம். மலையக மக்கள் சுதந்திரம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை தான் இன்னும் இருக்கின்றது.
நாங்கள் பாடப்புத்தகங்களில் இந்த சுதந்திரத்தை பற்றி கற்றிருக்கின்றோம் அதைப்பற்றி கலந்துரையாடியிருக்கின்றோம். ஆனால் அதனை இன்று வரை அனுபவிக்க முடியாத மக்களாக நாம் இருந்து வருகிறோம்.
இந்த நாட்டில் இத்தினம் களியாட்டமாக கொண்டாடப்படுகின்றதே தவிர இந்த நாட்டில் வாழுகின்ற மலையக மக்களாக இருக்கலாம் வடக்கு கிழக்கு மக்களாக இருக்கலாம். சிறுபான்மை மக்களாக இருக்கலாம் இன்னும் இந்த மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளன.
சுதந்திரதினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் மலையக மக்கள் வாழ்ந்த காணியினை பறிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளது.
76 வருடத்திற்கு முன் தொடக்கம் காணியுரிமையினை கேட்டு இந்த மக்கள் போராடி வருகின்றனர்.அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் பதுளை மாவட்டத்தில் 50 வருடங்களாக எமது மக்கள் வாழ்ந்த காணியினை பறிப்பதற்கான பல சூழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
பிரதேச செயலாளர் 50 வருடமாக வாழ்ந்து வரும் வீடுகளின் கதவுகளில் காணியினை விட்டு வெளியேறுமாறு ஒட்டப்பட்டுள்ளது.
அதே பாராளுமன்ற உறுப்பினர் ஒரு சாமர சம்பத் தசநாயக்க அவர்கள் எங்களது பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கி விட்டு பலவந்தமாக அங்கே அடிக்கல் நாட்டி விட்டு சென்றிருக்கின்றார்.
இதை எல்லாம் என்னத்தை குறிக்கின்றது என்றால் சுதந்திர தினம் மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாது வெறுமனே ஒரு கோலாகலமான கொண்டாட்டமாக கொண்டாடப்படுவதை நாங்கள் மறுக்கின்றோம்.
மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று இந்த நாளிலே நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM