நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிப்பு - விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி

05 Feb, 2022 | 10:49 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. மரணங்கள் , வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

70 சதவீதமானோருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்கினால் கொவிட் தொற்று தீவிர நிலைமையை அடைவதிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்று கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று 4  ஆம் திகதி  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். 

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது தொற்றாளர் எண்ணிக்கை 30 சதவீதத்தினாலும் , மரணங்களின் எண்ணிக்கை 8 - 10 சதவீதத்தினாலும் , ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர் எண்ணிக்கை 4 சதவீதத்தினாலும் மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4 - 5 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளது.

ஒமிக்ரோன் பரவல் அதிகரிப்புடன் இவ்வாறு தொற்றாளர் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

எனினும் இவ்வாறான நிலைமையிலும் கூட 39 சதவீமானோர் மாத்திரமே பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். எஞ்சியோரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும்.

காரணம் தடுப்பூசி வழங்கலின் ஊடாக மாத்திரமே கடந்த காலங்களில் நூற்றுக்கும் அதிகமாகக் காணப்பட்ட மரணங்களின் எண்ணிக்கையை தற்போது 20 ஐ விட குறைக்க முடிந்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் பதிவாகும் கொவிட் மரணங்களில் மூன்றில் இரண்டு முழுமையான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களாகும். 

மூன்றாம் கட்ட தடுப்பூசி 70 சதவீதமானோருக்கு வழங்கப்பட்டால் , கடந்த சில மாதங்களாக காணப்பட்ட புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருந்து தட்டுப்பாட்டுக்கு வெகுவிரைவில் தீர்வு -...

2023-11-30 16:58:01
news-image

ரொஷான் ரணசிங்கவைப் பயன்படுத்தி விட்டு தூக்கி...

2023-11-30 17:32:30
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய...

2023-11-30 16:52:14
news-image

அடுத்த மாதம் முதல் தடையில்லாது திரிபோஷா...

2023-11-30 17:28:13
news-image

சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள்...

2023-11-30 16:38:40
news-image

6 மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திம் வழங்கப்படும்...

2023-11-30 17:05:00
news-image

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து...

2023-11-30 18:11:54
news-image

சுகாதாரத்துறையில் மலையகத்தை புறக்கணிக்காதீர்கள் - வடிவேல்...

2023-11-30 17:00:24
news-image

கொட்டாஞ்சேனை, கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் 11 ...

2023-11-30 17:33:02
news-image

சட்டவிரோத மதுபான கடத்தலில் கைது செய்யப்பட்ட...

2023-11-30 17:31:25
news-image

சூரிய சக்தி அமைப்பு திட்டத்தில் 483...

2023-11-30 17:29:34
news-image

கம்பளையில் சட்டவிரோத பீடி விற்பனை நிலையத்திலிருந்து...

2023-11-30 17:34:13