சிறுமியை தாக்கிய தாயின் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Priyatharshan

07 Oct, 2016 | 04:45 PM
image

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் சிறுமியொருவரை தாயார் சித்திரவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணின் விளக்கமறியலானது யாழ்.நீதிவான் நீதிமன்றால் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நீர்வேலி பகுதியில் சிறுமியொருவரை அவரது தாயார் மிக மோசமாக அடித்து சித்திரவதை செய்வதை போன்ற வீடியோ ஒளிப்பதிவானது அயல்வீட்டாளரால் எடுக்கப்பட்டு சமூக வளைத்தளங்களில் பரவியிருந்தது. இதனையடுத்து இது தொடர்பாக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையடுத்து குறித்த தாயார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் அவருக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்ததுடன் அதில் அவரை விளக்கமறியலில் வைக்கவும் குறித்த வீடியோ ஒளிப்பதிவை மொறட்டுவ பல்கலைகழகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்வும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வழக்கு விசாரனையின் போது மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி பெ.மோகனதாஸ் குறித்த தாயின் பிள்ளைகளை தொடர்ச்சியாக சிறுவர் காப்பகத்தில் வைத்து வளர்ப்பதே பொருத்தமானது என தெரிவித்திருந்தார்.

மேலும் ஆய்வுக்கு அனுப்பட்ட ஒளிப்பதிவு தொடர்பான அறிக்கைகள் பூர்த்தியாக்கப்ட்டிருக்காத நிலையில் குறித்த பெண்ணை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் சிறுவர்களை சிறுவர் காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும் நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44