ஒரு இலட்ச அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

03 Feb, 2022 | 07:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் யோசனைகமைய 85 பில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 14 ஆயிரத்து 21 கிராமசேவகர் பிரிவுகள் ஊடாகவும்,4ஆயிரத்து 914 உள்ளுராட்சி மன்ற தொகுதிகள் ஊடாக ஒரு இலட்ச அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாடுதழுவிய ரீதியில் ஆரம்பமானது.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமானது.இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்கள்,அரச அதிகாரிகள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு இலட்சம் அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ 'கிராமத்துடனான உரையாடல்'செயற்திட்டத்தின் ஊடாக மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்க தீர்மானித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கிராமத்துடனான உரையாடல் செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் யோசனைக்கமைய நாடுதழுவிய ரீதியில் உள்ள கிராமசேவகர் பிரிவு,உள்ளுராட்சிமன்ற பிரிவு ஆகியவற்றின் ஊடாக மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க 1இலட்சம் அபிவிருத்தி செயற்திட்ட பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக 85 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்செயற்திட்டத்தை 11மாத காலத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகிறது.

இவ்வருட இறுதிக்குள் பாரிய அபிவிருத்தி பணிகள் பூரணப்படுத்தப்படும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48