ஒரு இலட்ச அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

03 Feb, 2022 | 07:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் யோசனைகமைய 85 பில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 14 ஆயிரத்து 21 கிராமசேவகர் பிரிவுகள் ஊடாகவும்,4ஆயிரத்து 914 உள்ளுராட்சி மன்ற தொகுதிகள் ஊடாக ஒரு இலட்ச அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாடுதழுவிய ரீதியில் ஆரம்பமானது.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமானது.இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்கள்,அரச அதிகாரிகள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு இலட்சம் அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ 'கிராமத்துடனான உரையாடல்'செயற்திட்டத்தின் ஊடாக மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்க தீர்மானித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கிராமத்துடனான உரையாடல் செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் யோசனைக்கமைய நாடுதழுவிய ரீதியில் உள்ள கிராமசேவகர் பிரிவு,உள்ளுராட்சிமன்ற பிரிவு ஆகியவற்றின் ஊடாக மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க 1இலட்சம் அபிவிருத்தி செயற்திட்ட பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக 85 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்செயற்திட்டத்தை 11மாத காலத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகிறது.

இவ்வருட இறுதிக்குள் பாரிய அபிவிருத்தி பணிகள் பூரணப்படுத்தப்படும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56