சுதந்திர தினத்தில்கூட தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாவிட்டால் அது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களையும் அரசு புறக்கணிப்பதாகவே அமையும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கைவாழ் அனைத்து இன மக்களினதும் பங்களிப்பினால் ஆங்கிலேயரின் 133 வருடகால ஆட்சிக்குப் பின்னர் 1948ம் ஆண்டு இன்றைய தினத்தில் இலங்கைத் தீவுக்கான சுதந்திரம் கிடைத்தது.
எனினும் அந்த சுதந்திரக் காற்றை தமிழ் பேசும் மக்களும் சுவாசிப்பதற்கு அரசு இடமளிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக தமிழ் பேசும் மக்களும் தங்களுடைய பங்களிப்பை இன்றுவரை வழங்கி வருகின்றார்கள் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது.
அத்துடன் பாகுபாடு காண்பிப்பதை விடுத்து அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்ல அரசு முயற்சிக்க வேண்டும். இதுவே நாட்டை சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும்.
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் 26வது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமையாக மொழி உரிமை காணப்படுகின்றது.
ஒருவரின் ஐந்து விரல்களை போலவே, இலங்கையர்களின் தாய் மொழியாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் காணப்படுகின்றன.
எனவே அரசு இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுடைய உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து சுதந்திரதினத்தில் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM