“தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு- எதிர்பாராத வயது பிரிவினர் மரணிக்கக் கூடும்”

Published By: Digital Desk 4

02 Feb, 2022 | 08:34 PM
image

 (எம்.மனோசித்ரா)

தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் போது , எதிர்பாராத வகையில் , எதிர்பாராத வயது பிரிவினர் மரணிக்கக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. எனவே வைரஸ் பரவலுக்கு இடமளிக்காத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நாட்டை முடக்குவதா ? இல்லையா ? விரைவில் தீர்மானம் - விசேட வைத்திய நிபுணர்  ஹேமந்த ஹேரத் | Virakesari.lk

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் நிறைவடைந்ததன் பின்னரும் ஒரு நபரால் தொற்று பரவக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகிறதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் போது , எதிர்பாராத வகையில் , எதிர்பாராத வயது பிரிவினர் மரணிக்கக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.

அதற்காக மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாமலிருப்பது பொறுத்தமானதாக இருக்காது. இதற்கான ஒரே தீர்வு கொவிட் தொற்று பரவுவதைத் தவிர்ப்பது மாத்திரமேயாகும். தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பை சாதாரணமாகக் கருதக் கூடாது.

எதிர்;வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு , தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் தொற்றாளர் எண்ணிக்கையில் ஏற்த்தாழ்வுகள் ஏற்படலாம்.

மக்கள் ஒன்று கூடல்களின் போது தொற்று விரைவாக பரவக் கூடிய வாய்ப்பும் அதிகமாகும். எனவே இதுபோன்ற விடயங்களை தவிர்த்து பாதுகாப்பாக செயற்பட வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை -பிரிட்டனின்...

2025-03-25 06:47:52
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15